Rules|Contact Us|Register|Home
 

 

 
Sort news by: Date | Popularity | Attendance | Commentaries | Alphabet

பாராளுமன்ற முற்றுகை: வி.கே.சிங்கின் கருத்துக்கு முன்னாள் தளபதிகள் எதிர்ப்பு

Author: admin at 6-11-2012, 17:38
பாராளுமன்ற முற்றுகை: வி.கே.சிங்கின் கருத்துக்கு முன்னாள் தளபதிகள் எதிர்ப்பு

பாராளுமன்ற முற்றுகை தொடர்பாக முன்னாள் ராணுவ தளபதி வி.கே. சிங் கூறியுள்ள கருத்துக்கள் அவர் வகித்த பதவிக்கு உரியவைகளாக இல்லை என்று முன்னாள் ராணுவ தளபதிகள் விமர்சித்துள்ளனர். முன்னாள் ராணுவ தளபதி வி.கே சிங், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்ற ஹசாரேவின் கோரிக்கையை அவர் ஆதரித்தார்.

நிதின் கட்காரியின் பேச்சுக்கு மணீஷ்திவாரி கண்டனம்

Author: admin at 6-11-2012, 17:35
நிதின் கட்காரியின் பேச்சுக்கு மணீஷ்திவாரி கண்டனம்

சுவாமி விவேகானந்தரையும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமையும் ஒப்பிட்டு பா.ஜ.க தலைவர் நிதின் கட்காரி பேசிய பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நிதின் கட்காரியையும் பாகிஸ்தான் தீவிரவாதி கசாப்பையும் ஏன் ஒப்பிட்டு பேசக் கூடாது என்கிறது காங்கிரஸ் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கட்காரி, சுவாமி விவேகானந்தருக்கும், தாவூத் இப்ராகிமுக்கும் அறிவு என்பது ஒரே மாதிரியானதுதான்.

Author: admin at 6-11-2012, 17:34
பீகார்சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த தொண்டர்கள்

குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி 2 ஆண்டுகளுக்குப் பிறகு பீகார் சென்று திரும்பியுள்ளார். பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா கூட்டணி அரசாங்கம் நடைபெற்று வருகிறது. ஆனால் பீகார் முதல்வர் நிதீஷ்குமாரோ, குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியை தொடர்ந்தும் எதிர்த்தே வருகிறார். பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக நரேந்திர மோடியை நிறுத்தக் கூடாது என்பதை நிதீஷ்குமார் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறார். நிதீஷ்குமாரைப் பொறுத்தவரை நரேந்திரமோடி, ஒரு மதவாதி என்ற கருத்தில் உறுதியாக இருக்கிறார். இந்நிலையில் பீகார் மாநில பா.ஜ.க மூத்த தலைவரும் குஜராத் மாநில முன்னாள் ஆளுநருமான கைலாஷ்பதி மிஸ்ரா காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தனி விமானத்தில் நேற்று முன்தினம் பீகார் சென்றார் மோடி. துக்க நிகழ்ச்சிக்காக மோடி சென்றாலும் பா.ஜ.க வினர் உற்சாக வரவேற்பளித்திருக்கின்றனர். பீகார் முதல்வர் நிதீஷ்குமாருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வருங்கால பிரதமரே வருக, வருக என்று கோஷம் போட்டு அசத்தியுள்ளனர் பா.ஜ.க வினர். பாட்னாவில் கைலாஷ்பதிக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பினார் மோடி. நேற்று முன்தினம்தான் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து கோரும் பிரம்மாண்ட பேரணியை நிதீஷ்குமார் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் சார்க் மாநாடு: இந்தியக்குழு பங்கேற்பு

Author: admin at 6-11-2012, 17:33
பாகிஸ்தானில் சார்க் மாநாடு: இந்தியக்குழு பங்கேற்பு

பாகிஸ்தானில் தொடங்கிய சார்க் மாநாட்டில் மீரா குமார் தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழு பங்கேற்றுள்ளது. சார்க் நாடுகளின் நாடாளுமன்ற அவைத் தலைவர்களின் 6 ஆவது மாநாடு, இஸ்லாமாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இந்தியா சார்பில் மக்களவைத் தலைவர் மீரா குமார் தலைமையிலான நாடாளுமன்றக் குழு பங்கேற்றது.

குரூப் 2தேர்வு வினாத்தாள் வெளியான விவகரம். ஒடிசா அச்சகஊழியர் கைது

Author: admin at 6-11-2012, 17:32
 குரூப் 2தேர்வு வினாத்தாள் வெளியான விவகரம். ஒடிசா அச்சகஊழியர் கைது

குரூப் 2 தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் ஒடிசாவை சேர்ந்த அச்சக ஊழியர் ஒருவரை சி.பி.சி .ஐ.டி போலீசார் கைது செய்துள்ளனர். தமிழ் நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் குரூப் -2 தேர்வு நடைபெற்றது.ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மையத்தில் கேள்விதாள் நகளை வைத்திருந்தாக ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த தனக்கொடி மற்றும் அவரது கணவர் செந்தில் உள்பட 15 பேரை இது வரை போலீசார் கைது செய்துள்ளனர் இந்த விவகாரத்தில் சென்னையை சேர்ந்த தியாகராஜன் ,செந்தில் குமார் ,ஸ்ரீதர் ராஜ் (பாலன்) ஆகியோர் மூலம் தமிழகத்தில் பல இடங்களில் கேள்விதாள் வெளியானது என்பது விசாரனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஊழல் ஒழிப்புக்கு காங்கிரஸிடம் எந்தத் தீர்வும்இல்லை: பா.ஜ.க.

Author: admin at 6-11-2012, 17:30
ஊழல் ஒழிப்புக்கு காங்கிரஸிடம் எந்தத் தீர்வும்இல்லை: பா.ஜ.க.

ஊழல் ஒழிப்புக்கு காங்கிரஸிடம்
எந்தத் தீர்வும் இல்லை என்று பா.ஜ.க. விமர்சித்துள்ளது.
இது குறித்து பா.ஜ.க.மாநிலங்களவைத் தலைவர் அருண்ஜேட்லி
ஞாயிற்றுக்கிழமை தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியது:

இந்தியாவுக்கு `வீடோ' அதிகாரம்வழங்காதது ஜனநாயக விரோதம்

Author: admin at 6-11-2012, 17:29
இந்தியாவுக்கு `வீடோ' அதிகாரம்வழங்காதது ஜனநாயக விரோதம்

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்காதது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் தெரிவித்தார். சீனாவில் பெய்ஜிங் கூட்டமைப்பின் வேண்டுகோளை ஏற்று, அப்துல் கலாம் அங்கு சென்றுள்ளார். அங்கு தொலைக்காட்சிக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி: 100 கோடிக்கும் அதிகமான மக்கள் சக்தியை உடைய ஒரு நாட்டுக்கு `வீடோ' அதிகாரம் வழங்காமல் இருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. முடிவெடுக்கும் அதிகாரத்தை 100 கோடி மக்களிடம் எவ்வளவு காலத்துக்குவழங்காமல் இருக்க முடியும்? என்றார்.

இலங்கை 14 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது

Author: admin at 6-11-2012, 17:27
இலங்கை 14 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது

நியூசிலாந்து அணிக்கு எதிராக பல்லே கல்லே நகரில் நடைபெற்ற 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 14 ரன் வித்தியாசத்தில் (டக்வொர்த் லீவிஸ் முறைப்படி) வெற்றி பெ ற்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணி தரப்பில், கேப்டன் ஜெயவர்த்தனே மற் றும் தில்ஷான் இருவரும் சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். அவர்களுக்கு பக்கபலமாக சங்கக்கரா ஆடினார். முன்னதாக பெளலிங்கின் போது, இல ங்கை பெளலர்கள் சிறப்பாக பந்து வீசி நியூசி.யின் ரன் குவிப்பை கட்டுப்படுத் தினர்.

ஒபாமாவுக்காக கிளிண்டன் தீவிரவாக்கு சேகரிப்பு

Author: admin at 6-11-2012, 17:25
ஒபாமாவுக்காக கிளிண்டன் தீவிரவாக்கு சேகரிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. கடந்த பல மாதங்களாக நாடெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒபாமாவுக்கு வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டுவதோடு மட்டுமல்லாம, தேர்தல் நிதி திரட்டுவதிலும் பெரும் பங்காற்றி வருகிறார் கிளிண்டன். கடந்த 24 வருட அமெரிக்க வரலாற்றில் பில் கிளிண்டனின் 8 வருட ஆட்சி தான் பொற்காலமாக இருந்தது. பதவியில் இருக்கும் போது தனிப்பட்ட முறையில் சில சர்ச்சைகளில் சிக்கியிருந்தால் கூட, அதிபராக அமெரிக்க மக்கள் அதிகம் நேசிக்கும் தலைவராக மதிக்கப்படுகிறார்.

காதலியை கரம் பிடிக்கும் நடிகர் மிர்ச்சி சிவா

Author: admin at 5-11-2012, 16:25
 காதலியை கரம் பிடிக்கும் நடிகர் மிர்ச்சி சிவா

நடிகர் மிர்ச்சி சிவாவுக்கு திருமணம். அவர் தான் காதலித்து வந்த பேட்மிட்டன் விளையாட்டு வீராங்கனையான பிரியாவை மணந்துகொள்கிறார்.

கோச்சடையான் படத்திற்காக டப்பிங் பேசும் தீபிகா படுகோனே

Author: admin at 5-11-2012, 16:23
 கோச்சடையான் படத்திற்காக டப்பிங் பேசும் தீபிகா படுகோனே

ரஜினியின் கோச்சடையான் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து படத்திற்கான டப்பிங் வேலைகள் அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் அமைதியாக நடந்த சட்டசபைதேர்தல் மந்தமாகதுவங்கி விறுவிறுப்படைந்தது

Author: admin at 5-11-2012, 16:16
இமாச்சல பிரதேசத்தில் அமைதியாக நடந்த சட்டசபைதேர்தல் மந்தமாகதுவங்கி விறுவிறுப்படைந்தது

இமாச்சல பிரதேச மாநிலத்தில் நேற்று சட்டசபை தேர்தல் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடந்தது. துவக்கத்தில் மந்தமாக துவங்கிய வாக்குப் பதிவு போகப் போக விறுவிறுப்பானது. இந்த தேர்தலில் வெற்றி பெறப் போவது பாரதீய ஜனதாவா, அல்லது காங்கிரசா என்பது டிசம்பர் 20 ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரியவரும். இமாச்சல பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதையடுத்து குஜராத் மாநிலத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் பரபரப்பாக தேர்தல் பிரச்சாரம் முடிந்து நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இம் மாநிலத்தில் பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பிரதான கட்சிகளாக போட்டியிடுகின்றன. இரண்டு கட்சிகளுமே மொத்தமுள்ள 68 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கின. பகுஜன் சமாஜ் கட்சி இந்த தேர்தலில் 66 வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது. இதைத் தொடர்ந்து இமாச்சல் லோஹித் கட்சி 36 இடங்களிலும், டி.எம்.சி. கட்சி 25 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 16 இடங்களிலும், இ. கம்யூனிஸ்டு கட்சி 15 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 12 இடங்களிலும் மற்றும் 105 சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள்.

Author: admin at 5-11-2012, 16:14
4 மணிநேர தாமதத்திற்கு ஸ்பைஸ்ஜெட்டுக்கு ரூ. 22,000 நஷ்டஈ்டு

காத்மண்டுவிலிருந்து டெல்லிக்கு வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தை 4 மணி நேரம் தாமதமாக இயக்கியதற்காக பயணி ஒருவருக்கு ரூ. 22 ஆயிரம் நஷ்ட ஈடு கொடுக்க நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருக்கிறது. டெல்லி - காத்மாண்டு வந்து செல்ல ஜகிஸ்கான் அகர்வால் தமது குடும்பத்தினருடன் கடந்த 2010 ம் ஆண்டு செப்டம்பர் 9 ம் தேதி ஸ்பைஸ்ஜெட்டில் டிக்கெட் பதிவு செய்திருந்தார். அகர்வால், பார்வை குறைபாடு உடையவர். காத்மண்டுவில் காலை 10.45 க்கு புறப்பட வேண்டிய விமானம் மாலை 3.24க்குத் தான் புறப்பட்டது. விமானம் தாமதமாக கிளம்பியதற்கு காரணம், ஏர் டிராபிக் என்று ஸ்பைஜெட் என்று சொல்வதில் உண்மை இல்லை என்பது அகர்வாலின் புகார். இதனை விசாரித்த நுகர்வோர் தீர்ப்பாயம், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு ரூ. 22 ஆயிரத்தை நஷ்ட ஈடாக அகர்வாலுக்கு கொடுக்க உத்தரவிட்டது. ஸ்பைஸ்ஜெட் தரப்பில் விமானம் தாமதமாக புறப்பட்டதற்கு சரியான காரணம் சொல்லப்படவில்லை என்பதால் நுகர்வோர் தீர்ப்பாயம் இத்தீர்ப்பை அளித்தது.

ஆந்திராவில் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

Author: admin at 5-11-2012, 16:13
ஆந்திராவில் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

விசாகப்பட்டினம் நகரில் கடந்த 36 மணி நேரமாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணைகள் நிரம்பி வழிகின்றன. மாவட்டம் முழுவதும் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. வெள்ளத்தினால் தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்து போத்துவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரத்தினசால், ஜன்மபூமி, சிம்மத்திரி, விசாகப்பட்டினம், ராஜமுந்கிரி பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஊழலை ஒழிக்கப் போராடுவோம் டெல்லி கூட்டத்தில் சோனியாபேச்சு

Author: admin at 5-11-2012, 16:11
ஊழலை ஒழிக்கப் போராடுவோம் டெல்லி கூட்டத்தில் சோனியாபேச்சு

ஊழல் ஒரு புற்று நோய் என்பதை ஒப்புக் கொள்கிறோம்.. ஊழலை எதிர்த்து உறுதியுடன் போராடுவோம் என்று ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளாகியிருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி சபதம் எடுத்துள்ளார். மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்து டெல்லியில் மாநாடு மற்றும் பேரணியை நடத்தியிருக்கிறது காங்கிரஸ் கட்சி. இப் பேரணிக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தலைமை வகித்தார். பேரணியின் முடிவில் ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல்காந்தி ஆகியோர் உரையாற்றினர்.

சாலைவிபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்

Author: admin at 5-11-2012, 16:09
சாலைவிபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்

சாலை விபத்தில் உயிரிழந்த இரண்டு பேர் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Author: admin at 5-11-2012, 16:07
சான்டிபுயலால் நியூயார்க்கில் குற்ற எண்ணிக்கை குறைவாம்

அமெரிக்காவை தாக்கிய சான்டி புயலால் அங்குள்ள மிக முக்கிய நகரங்கள் மிகப்பெரிய பேரழிவை சந்தித்தன. நியூயார்க் நகரமும் 'சான்டிாயின் தாண்டவத்திற்குத் தப்பவில்லை. ஆனால் இந்த புயலினால் சில நல்ல காரியங்களும் நடந்துள்ளதாம். அந்த நகரத்தில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாம். சான்டி புயல் கடந்த திங்கட்கிழமை கரையை கடந்தது. இந்த புயலுக்கு 41 பேர் நியூயார்க் நகரில் கொல்லப்பட்டனர். புயலினால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் கொலை 86 சதவிகிதம் குறைந்து போனது. கொள்ளை 30 சதவிகிதம் குறைந்து போனது. கார் திருட்டு 24 சதவிகிதம் குறைந்து போனதாம். கடந்த ஆண்டு இதே வாரத்தில் 1,541 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. அது இந்த ஆண்டு 1,061 ஆக குறைந்து போயுள்ளதாக புள்ளிவிபவரம் தெரிவிக்கிறது. கியாஸ் ஸ்டேசனிலும், பெட்ரோலுக்கும் அங்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதனை திருடத்தான் அதிக அளவில் முயற்சி நடைபெறுகிறது. சனிக்கிழமை மட்டும் கேஸ் நிறுவனங்களில் திருட முயன்றதாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தத்தில் சான்டி புயலால் குற்றங்கள் குறைந்திருப்பது நல்ல விசயம்தான் என்கின்றனர் நியூயார்க் நகரவாசிகள்.

முதல்வர் தன்னிறைவுத் திட்டம் கொண்டுவந்தவர் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்கியவர்

Author: admin at 5-11-2012, 16:02
முதல்வர் தன்னிறைவுத் திட்டம் கொண்டுவந்தவர் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்கியவர்

திருவள்ளூர் அடுத்த பூந்தமல்லியில் அ.தி.மு.க. திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் பி.வி.ரமணா தலைமையில் நடைபெற்றது. பூந்தமல்லி சிறுபான்மை பிரிவு நகர செயலாளர் ஜாவித் அகமது வரவேற்புரையாற்றினார்.

Author: admin at 5-11-2012, 16:00
பெண்களின் வாக்கு மீண்டும் ஒபாமாவுக்கு கிடைக்குமா?

அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் கடந்த தேர்தலைப் போல இம்முறை ஒபாமாவுக்கு பெண்கள் வாக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. 2008 ம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது பெண்கள் வாக்கு ஒபாமாவுக்கு அதிகமாகக் கிடைத்ததால் வெற்றி பெற முடிந்தது. ஒபாமாவுடன் ராம்னி நடத்திய முதல் நேருக்கு நேர் விவாதத்தின் போது ராம்னிக்கே பெண்கள் ஆதரவு அதிகமாக இருந்தது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஆனால் ஒபாமா தரப்பு இதை நிராகரிக்கிறது. இம்முறையும் ஒபாமாவின் வெற்றிக்கு பெண்களின் வாக்குகளே முதன்மையான காரணமாக இருக்கும் என்கின்றனர். கல்வி, சுகாதாரம், சமமான ஊதியம் போன்றவற்றை ஒபாமா நிர்வாகம் செய்திருக்கிறது என்பது அவரது ஆதரவாளர்களின் வாதம். செப்டம்பர் மாத இறுதியில் ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் கூட ஒபாமாவுக்கே பெண்கள் வாக்கு அதிகமாக கிடைத்திருந்தது என்பதையும் அவரது தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் ராம்னி ஒவ்வொரு முறையு பெண்கள் விஷயங்களில் நிலையான கொள்கை முடிவு இல்லாமல் மாறி மாறி பேசுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

மத்தியஅரசின் நவீனதாராள கொள்கைக்கு எதிராக சிறைநிரப்பும் போராட்டம்

Author: admin at 5-11-2012, 15:54
மத்தியஅரசின் நவீனதாராள கொள்கைக்கு எதிராக சிறைநிரப்பும் போராட்டம்

மத்திய அரசின் நவீன தாராளமயமாக்கல் கொள்கைக்கு எதிராக டிசம்பர் 18, 19 தேதிகளில் சிறைநிரப்பும் போராட்டம் நடத்தப்போவதாக ஏ.ஐ.டி.யூ.சி.மாநில தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சுப்பராயன் கூறினார். நீலகிரி மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி.,அனைத்து துப்புரவு தொழிலாளர்கள் சங்கத்தின் பேரவை மாநாடு ஊட்டி ஒய்.டபிள்யூ.சி.ஏ அரங்கில் நேற்று நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாநில கெளரவ தலைவர் சுந்தரராஜன் தலைமை தாங்கினார்.

Go to Top
 

Blazzegames.com