
முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி கழக பணிகள் மற்றும் மக்கள் பணிகள் ஆற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் தாம்பரம் காவல் நிலையம் அருகே உள்ள பேபி உயர்நிலைப்பள்ளியில் நேற்று காலை வெகு சிறப்பாக நடந்தது. கூட்டத்துக்கு தமிழக கால்நடைத்துறை அமைச்சரும், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான டி.கே.எம்.சின்னையா தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொருளாளரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் இரா.விஸ்வநாதன், உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம், பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி, காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் எம்.எல்.ஏ., எம்.எல்.ஏ.க்கள் வாலாஜாபாத் கணேசன், மொளச்சூர் இரா.பெருமாள், ப.தன்சிங், எஸ்.வேதாச்சலம், சென்னை மாநகர துணை மேயர் பெஞ்சமின், மாவட்ட ஊராட்சி தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம், பரங்கிமலை மேற்கு ஒன்றிய செயலாளர் என்.சி.கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.