Rules|Contact Us|Register|Home
 

 

 
Sort news by: Date | Popularity | Attendance | Commentaries | Alphabet

மின் பற்றாக்குறை: முன்னேற்றம் ஏற்படும்: முதல்வர்

Author: admin at 27-10-2012, 06:21
மின் பற்றாக்குறை: முன்னேற்றம் ஏற்படும்: முதல்வர்

தமிழகத்தில் உள்ள மின் பற்றாக்குறை பிரச்சினை நவம்பருக்குள் முன்னேற்றம் ஏற்படும். 2013-க்குள் முழுவதும் தீர்க்கப்படும். இந்த பிரச்சினைக்கு தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகளே காரணம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சியில் ஆற்றிய உரை வருமாறு:-

ஜெயலலிதாவுடன் 2 தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

Author: admin at 27-10-2012, 06:19
ஜெயலலிதாவுடன் 2 தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

தமிழக அரசு மக்களுக்கு நல்ல அரசாக செயல்பட்டு வருகிறது என்று தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். தே.மு.தி.க. கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மதுரை மத்திய தொகுதி உறுப்பினர் ஆர். சுந்தர்ராஜன், திட்டக்குடி தொகுதி உறுப்பினர் தமிழழகன் ஆகியோர் நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் சந்தித்து தங்கள் தொகுதி பிரச்சினை குறித்து மனுவை அளித்தனர். முதல்வர் ஜெயலலிதா மனுவை பெற்றுக் கொண்டு தொகுதி பிரச்சினையினை தீர்ப்பதாக உறுதி அளித்தார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு எம்.எல்.ஏ. சுந்தர்ராஜன் மலர் செண்டு கொடுத்தார்.

Author: admin at 27-10-2012, 06:14
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம்

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது.
தமிழக சட்டப் பேரவையின் வைர விழா குறித்தும், அடுத்த சட்டமன்ற கூட்டம் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. தமிழகத்தில் நிலவி வரும் மின் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வைர விழா: ஜனாதிபதிக்கு நேரில் அழைப்பு விடுத்த ஓ.பி.எஸ்.

Author: admin at 27-10-2012, 06:13
வைர விழா: ஜனாதிபதிக்கு நேரில் அழைப்பு விடுத்த ஓ.பி.எஸ்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள தமிழக சட்டசபையின் வைர விழாவில் பங்கேற்க வரும்படி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுப்பதற்காக, தமிழக அமைச்சர்கள் நேற்று காலை டெல்லிக்கு சென்றனர். அங்கு விழாவிற்கான அழைப்பிதழை நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் அவரது மாளிகையில் நேரில் சந்தித்து அவரிடம் அளித்து அழைப்பு விடுத்தனர்.

பா.ஜ.க.வினர் மீது தாக்குதல்: ராதாகிருஷ்ணன் கண்டனம்

Author: admin at 27-10-2012, 06:11
பா.ஜ.க.வினர் மீது தாக்குதல்: ராதாகிருஷ்ணன் கண்டனம்

பாரதிய ஜனதா கட்சியின் மருத்துவ பிரிவின் மாநில செயலாளர் டாக்டர் அரவிந்த்ரெட்டி படுகொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோன்று சிவகங்கை மாவட்டம் இளையான்குடியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணைத் தலைவர் எச்.ராஜா பேசும்போது, கொலை குற்றவாளிகளை கண்டு பிடிக்க வேண்டும் என்றும், பயங்கரவாதம் தலைதூக்க அனுமதிக்கக் கூடாது என்றும் பேசி உள்ளார்.

நில அபகரிப்பு புகார்: துக்கையாண்டி மனைவி ஆஜர்

Author: admin at 27-10-2012, 06:09
நில அபகரிப்பு புகார்: துக்கையாண்டி மனைவி ஆஜர்

நீலாங்கரை அருகே உள்ள பனையூர், உத்தண்டி பகுதிகளில் உள்ள ரூ.12 கோடி மதிப்புள்ள 12 கிரவுண்டு நிலத்தை அபகரித்து பங்களா கட்டி வாடகைக்கு விட்டதாக முன்னாள் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. துக்கையாண்டி, அவரது மனைவி சுப்புலட்சுமி, உறவினர் தமிழரசி, மகள்கள் யாமினி, யுபா ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

நவம்பர் 22-ல் பார்லி. குளிர்கால கூட்டத் தொடர்

Author: admin at 27-10-2012, 06:08
நவம்பர் 22-ல் பார்லி. குளிர்கால கூட்டத் தொடர்

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 22 ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்த விவகாரம் குளிர்கால கூட்டத் தொடரில் பரபரப்பை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Author: admin at 27-10-2012, 06:06
நவ.4-ல் டெல்லியில் காங்கிரசின் பிரம்மாண்ட பேரணி

ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பேரணி நடத்தி கொள்கை முழக்கமிடுவது வாடிக்கை! ஆனால் மத்திய அரசோ தமது கொள்கைகளை நியாயப்படுத்த டெல்லியில் பிரம்மாண்ட பேரணிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஏற்பாடு செய்து வரும் இந்த பேரணி மற்றும் பொதுக் கூட்டம் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை நியாயப்படுத்தும் வகையில் நடைபெற இருக்கிறது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா, பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். நாடு முழுவதும் இருந்தும் காங்கிரஸ் கட்சியினர் இப்பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. பேரணியின் முடிவில் ராம்லீலா மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 பைசா உயர்வு

Author: admin at 27-10-2012, 06:05
பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 பைசா உயர்வு

பெட்ரோல் விலையை லிட்டருக்கு 30 பைசாவும், டீசல் விலையை லிட்டருக்கு 18 பைசாவும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய மந்திரி சபை மாற்றம்: சிரஞ்சீவிக்கு மந்திரி பதவி?

Author: admin at 27-10-2012, 06:03
மத்திய மந்திரி சபை மாற்றம்: சிரஞ்சீவிக்கு மந்திரி பதவி?

மத்திய அமைச்சரவை நாளை ஞாயிற்றுக்கிழமை மாற்றியமைக்கப்படும் என தெரிகிறது. இந்த அமைச்சரவையில் ராகுல் காந்தி இடம்பெறுவார் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அவர் இடம்பெற மாட்டார் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அவரை மத்திய அமைச்சரவையில் சேர்ப்பது குறித்து பிரதமரும், சோனியாவும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

சொத்து குவிப்பு வழக்கு: ஜெகன் ஆடிட்டருக்கு சம்மன்

Author: admin at 27-10-2012, 06:02
சொத்து குவிப்பு வழக்கு: ஜெகன் ஆடிட்டருக்கு சம்மன்

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சொத்து குவிப்பு வழக்கில் சி.பி.ஐ.போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நெருங்குகிறது

Author: admin at 20-10-2012, 07:07
காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நெருங்குகிறது

வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினத்திலிருந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

கனமழை : சென்னையில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

Author: admin at 20-10-2012, 07:06
கனமழை : சென்னையில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் மூன்று தினங்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இலங்கையின் தென்மேற்கு கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நேற்று முன்தினம் தெற்கு நோக்கி நகர்ந்து வங்கக் கடலில் தென்மேற்கு பகுதியில் நிலை கொண்டுள்ளது. நேற்று அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழக கடலோரப் பகுதி நோக்கி நகர்ந்து வந்தது. இதனால் தமிழ்நாடு முழுவதும் நேற்றும் பலத்த மழை பெய்தது.

கூட்டு குழு முன்பு கேபினட் செயலாளர் வாக்குமூலம்

Author: admin at 20-10-2012, 07:04
கூட்டு குழு முன்பு கேபினட் செயலாளர் வாக்குமூலம்

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஜெபிசி எனப்படும் நாடாளுமன்ற கூட்டுக்குழு முன்பாக ஆஜரான முன்னாள் கேபினட் செயலாளர் சந்திரசேகர் உரிம கட்டணமாக ரூ.35ஆயிரம் கோடி நிர்ணயிக்க தான் பரிந்துரைத்ததாக கூறியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் கொச்சி விமானம் கடத்தப்பட்டதா?

Author: admin at 20-10-2012, 07:03
திருவனந்தபுரத்தில் கொச்சி விமானம் கடத்தப்பட்டதா?

கொச்சி விமானம் கடத்தப்பட்டதாக கூறப்பட்டதை அடுத்து திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சில மணி நேரம் பரபரப்புஏற்பட்டு போனது. நேற்று காலை அபுதாபியில் இருந்து கொச்சிக்கு புறப்பட்ட ஏர்இந்தியா விமானம் கொச்சியில் வானிலை மிக மோசமாக இருந்ததால் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. கிட்டத்தட்ட 3 மணி நேரமாகியும் விமானம் அங்கேயே நின்று இருந்தது. பயணிகளையும் இறக்கிவிடவில்லை. மேலும் விமானம் எப்போது புறப்படும் என்ற தகவலும் அவர்களுக்கு சொல்லப்படவில்லை. அது மட்டுமல்ல. அவர்களுக்கு உணவோ, காபியோ, தண்ணீரோ கூட தரப்பவில்லையாம்.

எங்கள் மீது விசாரணைக்கு உத்தரவிட தயாரா? கெஜ்ரிவால்

Author: admin at 20-10-2012, 07:01
எங்கள் மீது விசாரணைக்கு உத்தரவிட தயாரா? கெஜ்ரிவால்

ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் 3 உறுப்பினர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிட தயாரா என்று மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார். சமூக ஆர்வலராக இருந்து தற்போது புதிய அமைப்பு தொடங்கி இருப்பவர்தான் கெஜ்ரிவால். அன்னாஹசாரேவுடன் இணைந்து சில காலம் போராட்டம் நடத்திய இவருக்கு அரசியல் ஆசை வந்த பிறகு தற்போது புதிய அமைப்பை தொடங்கி இருக்கிறார். தொடங்கிய சில நாட்களாலேயே மத்திய அமைச்சர் உள்பட பல முக்கிய புள்ளிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசி வருகிறார் கெஜ்ரிவால்.

ஆதீனமடத்தை ஒப்படைக்க கோரிய மனு விசாரணை தள்ளிவைப்பு

Author: admin at 20-10-2012, 06:59
ஆதீனமடத்தை ஒப்படைக்க கோரிய மனு விசாரணை தள்ளிவைப்பு

மதுரை ஆதீனமடத்தை அரசிடம் ஒப்படைக்க கோரிய மனு விசாரணையை வருகிற 29ம்தேதிக்கு தள்ளி வைத்து கோர்ட் உத்தரவிட்டது. அறநிலையத்துறை ஆணையர் பி.தனபால் மதுரை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அருணகிரிநாதரும், நித்யாவும் இணைந்து கடந்த ஏப்23ம் தேதி மதுரை ஆதீனம் டிரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை மதுரை(தெற்கு) சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். ஆதீனமடாதிபதியாக இருக்கும் ஒருவர் அறக்கட்டளை துவங்குவது அறநிலையத்துறை விதிகளுக்கு முரணானது.

டி-20: சென்னை அணிக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்குமா?

Author: admin at 20-10-2012, 06:57
டி-20: சென்னை அணிக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்குமா?

சாம்பியன்ஸ் லீக் டி - 20 போட்டியில் ஜோகன்ஸ்பர்க் நகரில் இன்று நடக்க இருக்கும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன் ஸ் அணியும் மோத உள்ளன.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பலத்த மழை : வானிலை மையம் தகவல்

Author: admin at 19-10-2012, 19:05
 அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பலத்த மழை : வானிலை மையம் தகவல்

தமிழகத்தை ஒட்டி வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது தமிழகத்தை நெருங்கி கொண்டிருப்பதால், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நடிகை திரிஷாவின் தந்தை மரணம்

Author: admin at 19-10-2012, 19:02
 நடிகை திரிஷாவின் தந்தை மரணம்

பிரபல நடிகை திரிஷாவின் தந்தை கிருஷ்ணன் மாரடைப்பால் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 68.

நடிகை திரிஷாவின் தந்தை கிருஷ்ணனும், தாய் உமாவும் நீண்ட காலமாக பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். கிருஷ்ணன், ஆரம்பத்தில் சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மேனேஜராக பணியாற்றி வந்தார். பிறகு மகள் பெரிய ஹீரோயினான பிறகு அவளுடைய இமெஜ் பாதிக்குமே என்பதற்காகவே ஹைதராபாத்துக்கு சென்று விட்டார்.

Go to Top
 

Blazzegames.com